Powered By Blogger

Saturday, 28 September 2013

ஆசிரியர் தகுதி தேர்வு: ..ஹைகோர்ட் - அதிரடி அறிவிப்பு

"ஆசிரியர் தகுதி தேர்வில், எந்த பிரிவினருக்கும், தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்துவதில்லை என, அரசு முடிவெடுத்துள்ளது" என சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையை, அடுத்த மாதத்துக்கு, உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற, 60 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இந்த மதிப்பெண்ணை எடுத்தால் தான், தகுதி சான்றிதழை, ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கும். தகுதி மதிப்பெண்ணில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு, ஐந்து சதவீதம் தளர்த்த, அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, ஐகோர்ட்டில், வழக்கறிஞர் எம்.பழனிமுத்து உள்ளிட்டோர், மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இம்மனுக்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் வசுந்தரா தேவி சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி தாக்கல் செய்த பதில் மனு: ஆசிரியராக நியமிக்க கோருபவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் தேர்வின் போது தான், ஜாதி சுழற்சி முறை, அமலுக்கு வரும். ஆசிரியர்கள் நியமனத்துக்கு, தனி தேர்வு முறையை, ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றுகிறது. 

அரசு பிறப்பித்த வழிமுறைகளின்படி, தகுதி தேர்வில் வெற்றி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். தகுதி மதிப்பெண்ணை நிர்ணயம் செய்ய, அரசுக்கு அதிகாரம் உள்ளது. வெவ்வேறு பிரிவினருக்கு, வெவ்வேறு மதிப்பெண்கள் இருக்க முடியாது. ஐகோர்ட் உத்தரவுக்குப் பின், ஒரு குழு அமைக்கப்பட்டு, இந்தப் பிரச்னை ஆராயப்பட்டது. குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்தக் கூடாது என, முடிவெடுக்கப்பட்டது. 

குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான், தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தரத்தில், எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை என, அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. எந்தப் பிரிவினருக்கும், மதிப்பெண் தளர்த்துவதில்லை எனவும் முடிவெடுத்துள்ளது. 

எனவே, எந்தப் பிரிவினருக்கும் மதிப்பெண்ணை தளர்த்த தேவையில்லை. தகுதி மதிப்பெண்ணில், ஐந்து சதவீத சலுகை கோரிய மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, &'முதல் பெஞ்ச்&' முன், விசாரணைக்கு வந்தது. விசாரணையை, அக்., 22ம் தேதிக்கு, &'முதல் பெஞ்ச்&' தள்ளிவைத்தது.

"தமிழில் படித்தாலும் விஞ்ஞானி ஆகலாம் - மயில்சாமி அண்ணாதுரை.

‘‘தமிழில் படித்தாலும் என்னால் சாதிக்க முடியும் என்பதற்கு அடையாளம் தான் நான்’’ என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

தினத்தந்தி நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் இலக்கிய பரிசளிப்பு விழாவில் ‘‘சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு’’ பெற்ற உலகப்புகழ் தமிழ் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:–

என்னுடைய ‘‘கையருகே நிலா’’ என்ற நூல் என்னுடைய கன்னி முயற்சி. கிட்டத்தட்ட 50 அல்லது 60 விருதுகள் எனக்கு விண்வெளி துறையில் நான் செய்ததற்காக அளித்தாலும், நேற்று தினத்தந்தியில் முதல் பக்கத்தில் எனக்கு விருது கிடைத்திருப்பது என்பதை எனது அப்பா பார்த்துவிட்டு, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை என்பதை கடந்து தமிழறிஞர் மயில்சாமி அண்ணாதுரை என்பதை பார்த்து முதல் முறையாக என்னை பாராட்டினார்.

இதுவரைக்கும் என்னை மற்றவர்கள் பாராட்டியிருக்கலாம். அப்பா பாராட்டியது தினத்தந்தியில் வெளிவந்த முதல் பக்க செய்தியை பார்த்தப்பின்தான் பாராட்டினார்.

நான் படித்தபோது தினத்தந்தி முதல் மாணவனுக்கு பரிசு தருவார்கள். இந்த பரிசு வாங்க வேண்டும் என்பதற்காக படித்தேன். வாங்க முடியவில்லை. அன்றைக்கு விட்ட பரிசை திரும்ப வாங்க வேண்டும் என்பதற்காக விண்ணப்பித்தேன். வாங்கி உள்ளேன்.

தமிழில் படித்தாலும் சாதிக்க முடியும் என்பதும், தமிழில் படித்தால் உன்னால் நிலவுக்கே போகமுடியும் என்பதையும் இன்றைய மாணவர்களுக்கு, இன்றைய சிறார்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற ஒரே கடப்பாட்டில் எழுதியது தான் கையருகே நிலா என்ற புத்தகம்.

எனக்கு காலையில் 7.30 மணிக்கு அலுவலகத்திலிருந்து டிரைவர் வருவார். அவர் படித்து வைத்திருந்த தினத்தந்தியில், அவருக்கு பிடித்த செய்தியை, நான் என்ன படிக்க வேண்டுமோ அதை மடித்து வைத்திருப்பார். அதை நான் எடுத்து படிப்பேன். அன்னைக்கு விட்ட பரிசு, இன்னைக்கு எப்படி வருகிறது என்று பாருங்கள்.

தமிழ் அடுத்த தலைமுறைக்கு போக வேண்டும். இன்றைய குழந்தைகள் தமிழ் படிக்க வேண்டும். தமிழை உணர வேண்டும். பிள்ளைகள் படிக்க வேண்டும் என்றால் இன்றைய பெற்றோர்கள் தனது குழந்தைகள் தமிழில் படித்தால் மேலே வரமுடியும் என்று நம்ப வேண்டும். அதற்காக தான் எனது பணி சந்திரயானை அதையும் தாண்டி செவ்வாய்க்கு போக கூடிய விண்கலத்தை அனுப்பும் திட்டம்.

400 கிலோ மீட்டர் செல்லும் செயற்கைகோளை செய்தோம். அதையும் தாண்டி 36 ஆயிரம் கிலோ மீட்டர் செல்லும் செயற்கை கோள் செய்தோம். சந்திரயான் 4 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலவை தொட்டது. அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் 4 லட்சம் மில்லியன் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள செவ்வாயை தொடப்போகிறது.

அந்த வகையில் அறிவியல் அடுத்த கட்டத்தை தாண்டுகிறது. தமிழும் போக வேண்டும். அப்படி செல்ல வேண்டுமானால் எடுத்துக்கொண்டு போக வேண்டியது நாம் தான். 400 கிலோ மீட்டர் தூரம் செல்லும் செயற்கைகோள் மற்றவர்கள் செய்தனர். நாமும் செய்ய முடியும் என்று கருதி செய்தோம். ஆனால் அதையும் தாண்டி மற்றவர்கள் செய்ய முடியாததை, நம்மால் செய்ய முடியும் என்பதை சந்திரயான் காண்பித்தது. செவ்வாய்க்கும் போகிறோம்.இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.


மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) , பிப்ரவரி 16 தேதியன்று மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை ( Ctet)- 2014 நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக சிடிஇடி தேர்வு நடத்தப்படுகின்றது. 

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தகுதியுள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய பிப்ரவரி 16ம் தேதியன்று சிடிஇடி தேர்வு நடத்தப்படுகின்றது.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்ப படிவத்தை சிபிஎஸ்இ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கடைசியாக சிடிஇடி தேர்வு , கடந்த ஜூலை 28 , 2013ல் நடத்தப்பட்டு , செப்டம்பர் 3ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 9 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தன. ஆனால் 11 சதவீத பேர் மட்டுமே சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித பயிற்சி


             அடிப்படை அறிவியல் குறித்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியை அளிக்க, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஏற்பாடு செய்துள்ளது.

          மாணவர்களிடையே, அறிவியல் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த, இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, கடந்த வாரம், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, தேர்வு செய்யப் பட்ட, 150 ஆசிரியர்களுக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து, அனுபவம் வாய்ந்த ஆசிரியரை அழைத்து, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், இந்த பயிற்சியை அளித்தது.

           பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாவட்டங்களுக்குச் சென்று, பிற ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிப்பர் என்றும், பின், செயல் விளக்கத்துடன், அடிப்படை அறிவியல் குறித்து, மாணவர்களுக்கு, ஆசிரியர் விளக்குவர் என்றும் கூறப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்ட, 150 ஆசிரியர்களுக்கு, நேற்று, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

              இதுகுறித்து, ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், "அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் மற்றும் மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்ககத்தின் மூலம், அனைத்துப் பள்ளிகளுக்கும், தேவையான அளவிற்கு, அறிவியல் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, செயல் விளக்கத்துடன், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில், ஆசிரியர்களுக்கு, எவ்வித சிக்கலும் ஏற்படாது" என்றார்.

அடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித பயிற்சி


             அடிப்படை அறிவியல் குறித்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியை அளிக்க, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஏற்பாடு செய்துள்ளது.

          மாணவர்களிடையே, அறிவியல் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த, இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, கடந்த வாரம், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, தேர்வு செய்யப் பட்ட, 150 ஆசிரியர்களுக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து, அனுபவம் வாய்ந்த ஆசிரியரை அழைத்து, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், இந்த பயிற்சியை அளித்தது.

           பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாவட்டங்களுக்குச் சென்று, பிற ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிப்பர் என்றும், பின், செயல் விளக்கத்துடன், அடிப்படை அறிவியல் குறித்து, மாணவர்களுக்கு, ஆசிரியர் விளக்குவர் என்றும் கூறப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்ட, 150 ஆசிரியர்களுக்கு, நேற்று, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

              இதுகுறித்து, ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், "அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் மற்றும் மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்ககத்தின் மூலம், அனைத்துப் பள்ளிகளுக்கும், தேவையான அளவிற்கு, அறிவியல் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, செயல் விளக்கத்துடன், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில், ஆசிரியர்களுக்கு, எவ்வித சிக்கலும் ஏற்படாது" என்றார்.

அடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித பயிற்சி


             அடிப்படை அறிவியல் குறித்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியை அளிக்க, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஏற்பாடு செய்துள்ளது.

          மாணவர்களிடையே, அறிவியல் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த, இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, கடந்த வாரம், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, தேர்வு செய்யப் பட்ட, 150 ஆசிரியர்களுக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து, அனுபவம் வாய்ந்த ஆசிரியரை அழைத்து, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், இந்த பயிற்சியை அளித்தது.

           பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாவட்டங்களுக்குச் சென்று, பிற ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிப்பர் என்றும், பின், செயல் விளக்கத்துடன், அடிப்படை அறிவியல் குறித்து, மாணவர்களுக்கு, ஆசிரியர் விளக்குவர் என்றும் கூறப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்ட, 150 ஆசிரியர்களுக்கு, நேற்று, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

              இதுகுறித்து, ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், "அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் மற்றும் மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்ககத்தின் மூலம், அனைத்துப் பள்ளிகளுக்கும், தேவையான அளவிற்கு, அறிவியல் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, செயல் விளக்கத்துடன், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில், ஆசிரியர்களுக்கு, எவ்வித சிக்கலும் ஏற்படாது" என்றார்.

Wednesday, 25 September 2013

முதுகலை ஆசிரியர் தேர்வில் , தமிழ் பாட கேள்வித்தாளை , பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு , அபராதம் விதிப்பதுடன் , அந்த அச்சகத்தை , கறுப்பு பட்டியலில் சேர்க்கவும் , டி.ஆர்.பி. , முடிவு செய்துள்ளது. 

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் , காலியாக உள்ள , 2,881  முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப , கடந்த ஜூலையில் , டி.ஆர்.பி. , போட்டித் தேர்வை நடத்தியது. 1.5  லட்சம் பேர் , தேர்வு எழுதினர். இதன் முடிவு , இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் , தமிழ் பாட கேள்வித்தாளில் , 52  கேள்விகளில் , எழுத்துப்பிழைகள் இருந்தன என்றும் , இதனால் , அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் , மதுரையைச் சேர்ந்த ஒரு தேர்வர் , ஐகோர்ட் , மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு , டி.ஆர்.பி. , க்கு , கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. "கேள்விகளில் உள்ள எழுத்துப்பிழையால் , கேள்வியை புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படவில்லை , எனினும் , அந்த கேள்விகளை நீக்கிவிட்டு , மீதமுள்ள கேள்விகளை கணக்கிட்டு , மதிப்பெண் வழங்கலாம் ' என்ற , டி.ஆர்.பி. , யின் கருத்தை , கோர்ட் ஏற்கவில்லை.  " பிழையான கேள்விகளை அச்சிட்டது ஏன் ?, இதற்கு டி.ஆர்.பி. , தான் பொறுப்பு ' என்று , கோர்ட் தெளிவாக கூறிவிட்டது. பெரிய சிக்கலுக்கு காரணமான , அச்சகத்தின் மீது , டி.ஆர்.பி. , கடும் கோபத்தில் உள்ளது. 

இதுகுறித்து , டி.ஆர்.பி. , வட்டாரங்கள் கூறியதாவது: ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ள அச்சகத்தில் தான் , கேள்வித்தாளை அச்சடித்தோம். "செக்யூரிட்டி பிரஸ் ' என , கூறப்படும் இதுபோன்ற அச்சகங்களில் , கேள்வித்தாள்கள் தவிர , வேறு எதுவும் அச்சிடப்படாது. கேள்விகள் கலக்கப்பட்டு , பின் , " ஏ.பி.சி.டி. ,' என , நான்கு பிரிவாக அச்சடிக்கப்பட்டன. இதில் , " பி ' வகை கேள்வித்தாளில் தான் , எழுத்துப்பிழைகள் ஏற்பட்டுள்ளன. கம்ப்யூட்டரில் , " பான்ட் ' கோளாறு ஏற்பட்டதால் , எழுத்துப்பிழை ஏற்பட்டதாக , அச்சகம் தெரிவித்துள்ளது. அச்சடிப்பதற்கு முன் , அச்சகத்தில் உள்ள பாட வாரியான நிபுணர்கள் , கேள்விகளை சரிபார்ப்பர் ; அச்சடிக்கப்பட்டபின் , சரிபார்ப்பது கிடையாது. அப்படியே , சீலிடப்பட்டு அனுப்பப்படும். நடந்த குளறுபடிக்கு , அச்சகம் தான் காரணம். இதற்காக , சம்பந்தபட்ட அச்சகத்தின் மீது , கடும் நடவடிக்கை எடுக்கப்படும். "பில் ' தொகையில் , 25 சதவீதம் வரை , அபராதம் விதிப்பது , அந்த அச்சகத்தை , " கறுப்பு பட்டியலில் ' சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கை குறித்து , ஆலோசித்து வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு , டி.ஆர்.பி. , வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளி மாணவர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் மலேரியா, சிக்குன் குனியா போன்ற வைரஸ் காய்ச்சல் குழந்தைகள், பள்ளி மாணவர்களை எளிதில் தாக்கும். இதனால், அவர்கள் உடல் நலம் கெடுவதுடன், கல்வியும் பாதிக்கும். எனவே, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரும், தொடக்க கல்வித் துறை இயக்குநரும் உத்தரவிட்டுள்ளனர்.

அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரும் தங்கள் கட்டுப்பாட்டில் வரும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டியன குறித்த பத்து கட்டளைகளையும் பிறப்பித்துள்ளனர்.

தற்போது மழைக்காலமாக இருப்பதால் பள்ளி வளாகத்தில் நீர் தேங்காமல் இப்பதற்கான தடுப்பு நடவடிக்கையை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் குடிநீர்த் தொட்டி, கழிவு நீர்த் தொட்டி திறந்த நிலையில் இருத்தல் கூடாது. பயனற்ற திறந்த வெளிக்கிணறு, பள்ளம் இருந்தால் அதை மூடிவிட வேண்டும்.

பள்ளிக் கழிவறையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் கழிவு நீர்க் கால்வாய் இருந்தால் கொசுக்கள் உற்பத்தியாவதை சுகாதாரத் துறை மூலம் தடுக்க தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், வாகன டயர் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி கொசுக்கள் உற்பத்தியை தடுக்க வேண்டும்.

பள்ளி மேற்கூரையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் கட்டுமானப் பணிக்காக கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் தேக்கி வைக்காமல் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். சிறு பள்ளம், சிறு கிணறு இருந்தால், அவற்றை மூட வேண்டும். இது தொடர்பாக காலையில் நடக்கும் இறைவணக்கத்தின்போது மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மாணவர்கள் மூலம் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்தக் கட்டளைகளை அமல்படுத்தி நோய் தாக்குதலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குனரும், தொடக்க கல்வித் துறை இயக்குனரும் உத்தரவிட்டுள்ளனர்.
 பள்ளிக்கு பத்து கட்டளைகள் 

பள்ளி மாணவர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் மலேரியா, சிக்குன் குனியா போன்ற வைரஸ் காய்ச்சல் குழந்தைகள், பள்ளி மாணவர்களை எளிதில் தாக்கும். இதனால், அவர்கள் உடல் நலம் கெடுவதுடன், கல்வியும் பாதிக்கும். எனவே, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரும், தொடக்க கல்வித் துறை இயக்குநரும் உத்தரவிட்டுள்ளனர்.

அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரும் தங்கள் கட்டுப்பாட்டில் வரும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டியன குறித்த பத்து கட்டளைகளையும் பிறப்பித்துள்ளனர்.

தற்போது மழைக்காலமாக இருப்பதால் பள்ளி வளாகத்தில் நீர் தேங்காமல் இப்பதற்கான தடுப்பு நடவடிக்கையை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் குடிநீர்த் தொட்டி, கழிவு நீர்த் தொட்டி திறந்த நிலையில் இருத்தல் கூடாது. பயனற்ற திறந்த வெளிக்கிணறு, பள்ளம் இருந்தால் அதை மூடிவிட வேண்டும்.

பள்ளிக் கழிவறையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் கழிவு நீர்க் கால்வாய் இருந்தால் கொசுக்கள் உற்பத்தியாவதை சுகாதாரத் துறை மூலம் தடுக்க தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், வாகன டயர் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி கொசுக்கள் உற்பத்தியை தடுக்க வேண்டும்.

பள்ளி மேற்கூரையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் கட்டுமானப் பணிக்காக கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் தேக்கி வைக்காமல் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். சிறு பள்ளம், சிறு கிணறு இருந்தால், அவற்றை மூட வேண்டும். இது தொடர்பாக காலையில் நடக்கும் இறைவணக்கத்தின்போது மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மாணவர்கள் மூலம் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்தக் கட்டளைகளை அமல்படுத்தி நோய் தாக்குதலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குனரும், தொடக்க கல்வித் துறை இயக்குனரும் உத்தரவிட்டுள்ளனர்.

Tuesday, 24 September 2013

சான்றிதழ் சரிபார்த்து காத்திருப்பவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள, குழந்தைகள் இலவசம் மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 1–4–2010 முதல் அமலுக்கு வந்ததுள்ளது. இந்த சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு நியமிக்கப்படவேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவிட்டது.இதனடிப்படையில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தகுதி தேர்வு அவசியம் என்று 15–11–2011 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இந்த அரசாணையை எதிர்த்து டி.எஸ்.அன்பரசு உள்பட 94 பேர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:–

உதவி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி தேர்வு செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், 2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி முடிந்துவிட்டது.

இந்த நிலையில், தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டதால், தேர்வு நடவடிக்கையை ரத்து செய்தும், எங்களுக்கு பணி வழங்க மறுத்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த தீர்ப்பில், ‘‘தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிக்கையில், பிரிவு 5–ல் ஆசிரியர் பணிக்கு ஏற்கனவே தேர்வானவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை என்று கூறியுள்ளது. எனவே எதிர்காலத்தில் ஏற்படும் ஆசிரியர் காலியிடங்களை மனுதாரர்கள் 94 பேரை கொண்டு நிரப்பவேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து வேதாரண்யத்தை சேர்ந்த சுகுணா உள்பட 130 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு மனுவில், ‘‘2010–ம் ஆண்டு ஆசிரியர் பணியிடத்துக்காக 32 ஆயிரம் பேரது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. எனவே எங்களுக்கும் தகுதி தேர்வு எழுதவேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல், வேலை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்கள்.இந்த மனுவை நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்தார். அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகி, ‘‘தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பு நடந்த சான்றிதழ் சரிபார்க்கும் நடவடிக்கையில் மனுதாரர்கள் கலந்துகொண்டனர் என்பதற்காக தகுதி தேர்வு எழுதாமலேயே பணியில் நியமிக்க வேண்டும் என்ற தகுதி அவர்களுக்கு வந்துவிடாது. மேலும், அந்த சான்றிதழ் சரிபார்க்கும் நடவடிக்கையில் மனுதாரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. எனவே தகுதி தேர்வு எழுதாமல் பணி கேட்கும் உரிமை மனுதாரர்களுக்கு இல்லை’’ என்று வாதம் செய்தார்.மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் காசிநாத பாரதி உள்பட பலர் ஆஜராகி வாதம் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம், அதன் விதிகள் ஆகியவற்றின் கீழ் ஆசிரியர் பணியிடத்துக்கு தகுதி தேர்வு கட்டாயம் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதில் ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்கள், பணியில் சேர்ந்த நாளில் இருந்து 5 ஆண்டுகள் தகுதி தேர்வினை எழுதி தேர்ச்சி பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இப்போது வழக்கு தொடர்ந்திருக்கும் மனுதாரர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்வாகவும் இல்லை, பணியில் சேரவும் இல்லை. ஆனால், அவர்கள் தரப்பில் வாதம் செய்த வக்கீல்கள், ஏற்கனவே மனுதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்துள்ளதால், அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கவேண்டும். பணியில் சேர்ந்த பின்னர், 5 ஆண்டுக்குள் அவர்கள் தகுதி தேர்வில் பங்கேற்பார்கள் என்று கூறினார்கள். இந்த வாதத்தை ஏற்க முடியாது.

மனுதாரர்களை பொறுத்தவரை சான்றிதழ் சரிபார்க்கும் தேர்வுக்கு சென்றுள்ளனர். ஆனால் அதில் அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. ஒருவேளை அந்த சான்றிதழ் சரிபார்க்கும் நடவடிக்கையில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, தேசிய ஆசிரியர் கவுன்சில் அறிவிக்கையில் பிரிவு 5–ல் கூறப்பட்டுள்ளது படி விதிவிலக்கு கோர முடியும்.அவ்வாறு பணியில் சேர்ந்தாலும், 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வினை எழுதி தேர்ச்சி பெறவேண்டும். எனவே தகுதி தேர்வு எழுதாமல், ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது என்ற ஒரு காரணத்துக்காக மனுதாரர்களுக்கு பணி வழங்க உத்தரவிட முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாமல் 20 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டியது இருக்கும்.

மேலும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு ஆசிரியர்கள் எந்த லட்சணத்தில் நியமிக்கப்படுகிறார்கள் என்ற விவரம் 2012 ஜூலை மாதம் நடந்த தேர்வின் மூலம் வெளியுலகத்துக்கு தெரியவந்துள்ளது.
ஆசிரியர் பணிக்கு 12–7–2012 அன்று தகுதி தேர்வு நடந்தது. அதில், 7 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளனர். ஆனால், அதில் ஒரு சதவீதத்தினர் கூட தேர்ச்சி பெறவில்லை. 0.50 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதனால், ஆசிரியர் தகுதி துணை தேர்வு நடத்தவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. இதன்படி நடத்தப்பட்ட துணை தேர்விலும், 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, வெறும் 2.95 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஆசிரியர் பணி என்பது வேலை இல்லாதவர்களுக்கு வேலை வழங்கும் பணி அல்ல. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும், பதிவு மூப்பு அடிப்படையிலும் ஆசிரியர்களுக்கு பணி வழங்கினால், கல்வி தரம் குறைந்துவிடும். கல்வியின் தரம், குழந்தைகளின் நலன்தான் முக்கியம்.எனவே, மனுதாரர்களை தகுதி தேர்வு எழுதாமல், பணியில் நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது. மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.